Thursday, December 13, 2012

தனிமையில் இருக்கும்போது தமிழ் எனக்கு பிடித்திருக்கிறது ஆனால் தமிழனை எனக்கு பிடிக்கவில்லை

        தனிமையில் இருக்கும்போது தமிழ் எனக்கு பிடித்திருக்கிறது. தமிழ் நாட்டில் இருக்கும்போது தாய் மண் எனக்கு பிடித்திருக்கிறது. தனிமையில் தமிழையும் தாய்த்தமிழகத்தில் தாய்மண்ணையும் நான் நேசிக்கிறேன். ஆனால் தமிழனை எனக்கு பிடிக்கவில்லை அவன் தன்னலம் என்னைத் தடுக்கிறது.

      தமிழகத்தை தவிர்த்து வேறு இடங்களில் ஒரு தமிழனை பார்த்தால் அவன் (தமிழன்) தமிழனிடம் தமிழில் பேசுவதில்லை. எங்கே தமிழில் பேசினால் உதவி என்று கேட்டு உபத்திரமாய் வந்துவிடுவானோ என்ற சுய நலம்தான் காரணம். தமிழனின் சுய நலத்தைவிட அதிசுய நலவாதி இந்தியாவில் எந்த மொழிக்காரனும் இருக்கமாட்டான்.

   குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு சாப்பாட்டு கடைவீதியில் தள்ளு வண்டியில் தோசை சுட்டு விற்க்கும் தமிழன் தன் மனைவியிடம் தமிழில் பேசுகிறான் அவன் கடையில் தோசை சாப்பிட்ட நான் எவ்வளவு ஆனது என்று தமிழில் கேட்டேன் அவன் பஞ்சித்தர் ருபியா என்று குஜராத்தியில் சொல்கிறான்.  நீங்கள் சொல்வது புரியவைல்லை என்று சொல்கிறேன் மீண்டும் ( 75/- ) பஞ்ச்சித்தர் ருப்பியா தான்.

    இன்று குஜராத்தில் தேர்தல் நேற்று மதியம் ஒரு இரும்பு பட்டரைக்கு நான் பனி நிமிர்த்தமாக ஒரு எனிமோமீட்டர் பொருத்தும் ஸ்டான்டினை மறுவடிவாக்கம் செய்ய சென்றிருந்தேன். சோதனை கம்பம் ஏறும் ஒரு தொழிலாலியும் என் உடன் வந்திருந்தார் அங்கு நான் கொண்டுவந்த ஸ்டான்டினை பட்டரைத்தொழிலாலிகள் மறு வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த தொழிளலர்களிடம் தேர்தலைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன் அப்போது உங்களுக்கு வாக்களிக்க கட்சியினர் எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்று கேட்டேன். எங்களுக்குத்தெறியாது நாங்கள் எல்லாம் வாக்களிக்க பணம் பெறுவதில்லை என்று கூறினார்கள்.

        நான் சொன்னேன் எங்கள் ஊரில் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுப்பர்கள் என்றேன் அப்போது ஒரு தொழிலாளி என்னைப்பார்த்து நீங்கள் ஓட்டுப்போடுவதற்க்கு பணம் பெறுவது உங்களுக்கு தவறாக தெறியவில்லையா என்றான். தினம் 250 ரூபாய் கூலியாக பெறும் ஏழைத்தொழிலாளியின் வார்த்தையை,   தமிழக வாக்காளர்கள் அனைவரையும் செறுப்பால் அடித்ததுபோல் நான் உணர்ந்தேன்.

       எங்கோ ஒரு சில பிளக்ஸ் பேனர்கள் தவிர தள்ளுவண்டியில் ஒலி பெருக்கி வைத்து ஒருவர் தள்ளிகொண்டு போகிரார் அவ்வளவுதான் தேர்தலுக்கான எந்த அறிகுறியும் எனக்குத் தென்படவில்லை. தேர்தல் நேரத்தில் கட்ச்சி கோஷ்ட்டிகளாக மக்கள் பிரிந்திருக்கவில்லை அனைவரும் சிந்திக்கிறார்கள் முடிவெடுக்கிறார்கள் நாளை வாக்களிப்பார்கள். நாம் சோற்றில் உப்பு போடுவதில்லை சாம்பாரில்தான் போடுகிறோம் அவர்கள் ரொட்டியில் உப்புபோட்டு தின்கிறார்கள். இலவசங்களுக்கு ஆசைப்பட்டு இருளில் தவிக்கும் என் இனிய தமிழ் மக்களே ஒளிரட்டும் குஜராத் மீண்டும் விளக்கேற்றி வைப்பார் திருவாளர் நரேந்திரபாய் மோடி மண்னைக் கவ்வுவர் மதச்சாயம் பூசும் குஜராத் காங்கிரஸ் கேடி.



2 comments:

  1. //நாம் சோற்றில் உப்பு போடுவதில்லை சாம்பாரில்தான் போடுகிறோம்//

    இது தமிழரின் பொதுவான பழக்கம் கிடையாது. எங்கள் குடும்பங்களில் சோற்றில் உப்பு போட்டுதான் சமைப்போம்.

    ReplyDelete
  2. //குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு சாப்பாட்டு கடைவீதியில் தள்ளு வண்டியில் தோசை சுட்டு விற்க்கும் தமிழன் தன் மனைவியிடம் தமிழில் பேசுகிறான் அவன் கடையில் தோசை சாப்பிட்ட நான் எவ்வளவு ஆனது என்று தமிழில் கேட்டேன் அவன் பஞ்சித்தர் ருபியா என்று குஜராத்தியில் சொல்கிறான். நீங்கள் சொல்வது புரியவைல்லை என்று சொல்கிறேன் மீண்டும் ( 75/- ) பஞ்ச்சித்தர் ருப்பியா தான்.//

    அவருக்கு தமிழில் இந்த எண்களை எப்படி சொல்வது என்று தெரியாமலும் இருந்திருக்கலாம் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன் சென்றவர்களாக இருந்தால்.

    ReplyDelete