Sunday, December 9, 2007

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 8

அராசாங்கம் பற்றிய மக்களின் வெளிப்பாடு.

மக்கள் எந்த பிரச்சினை என்றாலும் அதற்க்கு அரசே காரனம் என்று கூறுகிறார்கள் ரோட்டோரத்தில் குடியிருப்பவன் முதல் பெரிய பெரிய பணமுதலைகள் வறை இதைத்தான் சொல்லுகிறார்கள். குடிக்கின்ற தன்னீர் முதல் புதைக்கிற சுடுகாடு வரை ஏகப்பட்ட பிரச்சினைகள் இந்த அரசின் ஆட்ச்சியில் இதுசரியில்லை அது சரியில்லை முழுசுதந்தைரம் இல்லை பாதுகாப்பு இல்லை என்கிறார்கள்.

முதலில் முழு சுதந்திரம் என்றால் என்ன முழுபாதுகாப்பு என்றால் என்ன என்று யாரும் சிந்தித்து பார்க்கும் மன நிலையில் இல்லை. ஒருவனுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டுமானால் அவனை அரசு எந்த விதத்திலும் கட்டுப்படுத்தகூடாது அப்படியானால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் செயாமலும் இருக்கலாம் அது அவன் விருப்பமாக இருக்கும். கொலை செய்தாலும் திருடினாலும் அடித்தாலும் ஏன் என்று யாரும் கேட்க்கமுடியாத நிலைதான் முழுசுதந்திரம். அடுத்து முழு பாதுகாப்பு ஒருவனுக்கு வழங்கவேண்டுமானால் அவன் முற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் குடிக்கும் தண்ணீர் முதல் படுக்கும் படுக்கைவரை என்ன வாங்கவேண்டுமானாலும் எதை செய்யவெண்டுமானாலும் அரசின் வழிகாட்டுதலில் இருந்து ஒரு இமியும் பிசகாமல் இருக்கவேண்டும் அப்போது தான் முழு பாதுகாப்பு கிடைக்கும்.

இப்போது இது இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை ஏதாவது ஒரு பக்கத்தைதான் பார்க்கமுடியும் இரண்டையும் ஒருசேரப்பார்ப்பது கடினம். சிலர் கேட்க்கலாம் கண்ணாடியில் பார்க்கலாம் என்று கண்ணாடியில் தோன்றுவது மாயபிம்பம்தானே அப்படியானால் நீங்களும் அந்த வாழ்க்கையை கனவினில் மட்டுமே அனுபவிக்கமுடியும் நிஜத்தில் அல்ல.

இப்போது நமக்கு எது தேவை சுதந்திரமா இல்லை பாதுகாப்பா இல்லை இரண்டும் தேவை எனில் 50% சுதந்திரம் 50% பாதுகாப்பு என வைத்துக்கொள்வோமா. அப்படி யெனில் நானயத்தை செங்குத்தாக வைத்துப்பார்ப்பதை போன்று தான் இருக்கும் நாம் பாதுகாப்பாக இருப்பதும் மற்றும் சுதந்திரமாக இருப்பதும் நமக்கே தெறியாது அது சந்தேகமாகவே இருக்கும். அந்த நானயம் லேசாக ஒரு புரம் சாய்ந்தாலும் ஒரு பக்கம் தெறியும் மறுபக்கம் தெறியாது இதை மக்களின் முடிவுக்கே விட்டுவிட்டால் எது எத்தனை சதம் வேண்டும் என்று நினைக்கிறார்கள் பார்ப்போம்.

உணக்கு துப்பாக்கி வைத்திருக்க சுதந்திரம் கொடுத்துவிட்டு உனக்கு பாதுகாப்பும் கொடுக்கவேண்டும் என்றால் " இது சின்ன பிள்ளத்தனமா இல்ல இருக்கு " இப்போ நம்மிடம் உள்ள முரன்பாடுகளை பார்ப்போம் ஒருவன் மற்றொருவனை அடித்தால் அடிவாங்கியவன் பாதுகாப்பாக இருக்கிறானா இல்லையா. சரி அடிவாங்கியவன் பாதுகாப்பாக இல்லை என்று கூறினால் ஒரு தாய் அல்லது தந்தை தன் குழந்தையை அடித்தால் அது பாதுகாப்பா இல்லையா. இது தான் அந்த பெரிய முரன்பாடு நான் பெற்றகுழந்தை அதற்க்கு அனைத்து செலவினங்களையும் சலுகைகளையும் அளிக்கும் நான் அந்த குழந்தையை அடிக்க உரிமை உண்டு என்று சொன்னால்.

உன்னை பாதுகாத்து உனக்கு தேவையான வற்றையெல்லாம் கொடுக்கும் அரசு உன்னை சவுக்கால் அடித்தால் நீ என்னசொல்வாய் அரசு என்னை அடிமையாக நடத்துகிறது என்றுதானே. அப்படி இருக்கையில் உன்குழந்தையை நீ அடிமையாக நடத்துகிறாய் என்றுதானே அர்த்தம் நீங்கள் அடிக்கும்போது என்ன அவர்களுக்கு சுகமாக இருக்குமா. இது என் சுதந்திரம் என்றால் குழந்தையின் சுதந்திரம் என்ன ஆவது அந்த குழந்தை எந்த உடை உடுத்தவேண்டும் என்ன படிக்கவேண்டும் என்னசாப்பிடவேண்டும் யாரை திருமணம் செய்து கொள்வது வரை உனக்கு பிடித்தவற்றையே பிள்ளைகள் மீது தினித்தால் அந்த இளம் பிஞ்சுகளின் கணவு அடியோடு பழாய்போய்விடுகிறது. அவர்களுக்கு உலகத்தைபற்றி எதுவும் தெறியாது என்று அவர்களுக்கு எதையும் தெறியாமலே செய்துவிடுகிறார்கள்.

இப்படி செய்வதெல்லாம் செய்து விட்டு அரசாங்கம் சரியில்லை என்பது நாமும் அரசாங்கத்தின் ஒரு அங்கம் தானே நாம் சரியாக இருக்கிறோமா இல்லை. தாங்கள் விருப்பப்பட்ட படிப்புகளை அரசினர் கல்லூரிகளில் சீட் இல்லை என்றாலும் தனியார் கல்லூரிகளில் சேர்த்து படிக்கவைத்துவிட்டு அந்த படிப்பிற்க்கு தகுதியான வேலைவாய்ப்பினை அரசு ஏற்ப்படுத்தி தரவேண்டுமாம். இந்து இடுக்கு பொறம்போகு போன்ற வசதியற்ற இடங்களில் வீடுகளை கட்டிக்கொண்டு அரசு சரியான வசதி செய்து தரவில்லை குடி நீர் வசதியில்லை சாக்கடை வசதி இல்லை என்று சொல்வது முடியாது என்றாலும் லஞ்சம் கொடுத்தாவது அதை சாதித்துவிடுவது என்னே சாதனை.

எல்லாரும் நகரங்களை நோக்கி குடியேறிவிட்டு நெறிசல் பற்றாகுறை மாசு பட்டுவிட்டது என்று அரசினை கடிந்து கொல்வதில் அர்த்தம் என்ன இருக்கிறது சாலை நெறிசல் கட்டிடங்களை அகற்றி சாலையை அகலப்படுத்தவும் மக்கள் விடமாட்டார்கள் எத்தனைபேர் ரோட்டில் அடிபட்டு செத்தாலும் பறாவாயில் நடுரோட்டில் இருக்கும் கோவில் களை அகற்றகூடாது மசூதிகளை அகற்றகூடாது என்றால் ஓட்டுவாங்கியதற்க்காக அமைச்சர்களின் தலைமீதா வண்டி ஓட்டுவதுஅரசு என்றால் அலாவுதீனின் அடிமை பூதம் என்று நினைக்கிறார்கள் கேட்டதெல்லாம் கொடுக்க. நீங்கள் கேட்ப்பதெல்லாம் வெளினாட்டில் இருந்து பெறவேண்டுமானால் நமது நாட்டை உலகவங்கியில் அடகுவைத்துதான் பெறமுடியும் அதற்க்கு ஈடாக உலகவங்கியும் சேர்ந்து நமது நாட்டை ஆட்ச்சி செய்கிறது நமக்குதேவயானவற்றை நாமே செய்துகொண்டால் நமக்கேன் இந்த பிரச்சினை.

2 comments:

  1. என்ன அய்யா உங்கள் பதிவு தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் உள்ளது.

    இணைத்து விட்டீர்கள் போல் உள்ளது

    கமண்டில் word verification option ஐ எடுக்கவும.

    ReplyDelete
  2. இரா.சுகுமாரன் அய்யா அவர்களின் வருகைக்கு நன்றி

    ReplyDelete